ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - குன்னூர் : அவசர மத்திய அமைச்சரவை கூட்டம்!
ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத் பயணித்ததை உறுதி செய்தது இந்திய விமானப்படை. இந்த விபத்து குறித்து அறிக்கை தாக்கல் செய்ய ராணுவம் உத்தரவுவிட்டுள்ளது. மேலும் அவசர அமைச்சரவைக் கூட்டத்தில் விபத்து குறித்தும் அது தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் விசாரணையின் நிலவரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட இருப்பதாகவும் தகவல். விபத்து நடைபெற்ற இடத்திற்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்லவிருப்பதாக கூறப்படுகிறது.
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தவர்கள் விவரம்
1.எல்.எஸ்.லிடர்
2.மதுலிகா ராவத்
3.பிபின் ராவத்
4.விவேக் குமார்
5.ஜிதேந்திர குமார்
6.ஹர்ஜிந்தர் சிங்
7.சாய் தேஜா
8.ஹாவ் சாட்பால்
9.குருசேவாக் சிங்
No comments:
Post a Comment