#வீட்டில்பார்த்தமாப்பிள்ளைய_பிடிக்கல.
பல்லடம் நெகமம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா மாணிக்கவேல்.
BBM பட்டதாரி.இவர்க்கு மண முடிக்கும் எண்ணத்தில் வீட்டார் வரன் தேடி வந்தனர்.
இவரது தாய்மாமன் மகன் சந்திரசேகரன்.
இவர் விவசாயம் பார்த்து வருகிறார்.
வருமானம் அதிகமில்லை என்பதாலும்,
இவர் அதிகம் படிக்காத பட்சத்தில் இவருக்கு வரும் வரன்கள் தடங்கலாகிக் கொண்டே
இருந்ததால் மனமுடைந்த இவர் திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்தார்.
உறவினர் வீட்டு எந்த விஷேசங்களுக்கும் செல்வதில்லை.
இந்நிலையில் சரண்யா தனது மாமா மகனையே திருமணம் செய்து கொள்ள போகிறேன் என வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.
"வருமானம் அதிகமில்லை.படிக்காதவனை கட்டி நீதா சீரழியப் போற"" என வீட்டார் சொல்லியும் கேட்காமல் மாமாவின் கரம் பிடித்தார் சரண்யா.
இதற்கு சரண்யா சொன்ன காரணம் நெஞ்சை நெகிழ வைத்தது.
""விவசாயிக்கு பெண் கொடுக்கவே பலரும் தயங்குகின்றனர்.ஏன்னு தெரியல.
நான் அதிகம் படித்த காரணத்தாலேயே என்னைப் பெண் கேக்க மாமா தயங்கினார்.
ஊருக்கு சோறு போடும் தொழில் செய்பவர்களுக்கு படித்த பெண்கள் தரும் மரியாதை பாருங்கள்.
இதை மனதில் வைத்தே என் மாமாவை மணந்தேன்.
நானும் அவருடன் விவசாயத்திற்கு உதவியாக இருப்பேன்.
விவசாயிய கலியாணம் பண்ணா வாழ்க்கை நன்றாக இருக்கும் என காட்ட போறேன்""
ஷேர் செஞ்சு சரண்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம்.
வாழ்த்துக்களுடன்.
<a target="_blank" href="https://www.amazon.in/b?_encoding=UTF8&tag=wilbirit-21&linkCode=ur2&linkId=5d1061563fc95c2975ed965e2a432c67&camp=3638&creative=24630&node=1374494031">Health </a>
No comments:
Post a Comment